சமூகநலத் துறை
சமூகநலத் துறை திட்டங்கள்
சமூநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை குழந்தைகள்,பெண்கள்,மூன்றாம் பாலினத்தவர் மற்றும் முதியோர் நலன்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
கருவறையிலிருந்து கல்லறை வரை உள்ள அனைத்து தரப்பினரையும் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் சமூகநலத்துறை செயல்பட்டு வருகிறது. கருவில் வளரும் பெண் சிசுவினை அழிக்காமல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொடங்கி பிறக்கும் பெண் குழந்தைகளின் உயிரைக் காக்கும் தொட்டில் குழந்தை திட்டம், ஆண் பெண் சமநிலையை உறுதி செய்யும் விதமாக பெண்குழந்தையை காப்போம் கற்ப்பிபோம் என்ற திட்டம்,பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்,குழந்தை திருமண தடுப்புச் சட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்கள்,பாதுகாப்பற்ற மற்றும் வறுமையில் வாடும் பெண்களுக்கான சேவை இல்லங்கள்,விதவைகள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் வறுமைக்கோட்ழற்கு கீழ் வாழும் பெண்கள் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் மகளிர் தொழிற் கூட்டுறவு சங்கங்களின் மூலம் விலையில்லா சீருடை தைத்து வழங்கும் திட்டம்,தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இது தவிர பெண்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் ஆகியன இத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மூத்த குடிமக்களை பாதுகாக்கும் விதமாக முதியோருக்கான இல்லங்கள்,ஒருங்கிணைப்பு வளாகங்கள் மற்றும் மூத்தோர் நலன் காக்கும் சட்டம் ஆகியன சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான திட்டங்களில் தகுதியுடையோர் பயனடைய தேவையான வழிமுறைகள், தகுதிகள் மற்றும் விளக்கங்கள் பின்வரும் பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளன.
சமூகநலத்துறையின் மூலம் செயல்படுத்தபத்தப்படும் திட்டங்கள்
- மூவலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்
- டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டம்
- ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்
- அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம்
- டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவி திட்டம்
மாவட்ட சமூகநல அலுவலகம் வேலுர் மாவட்டம்
மூவலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்
1 | திட்டத்தின் பெயர் | மூவலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம். |
2 | நோக்கம் | பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை பெற்றோரின் பெண் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயா்த்ததிருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. |
3 | வழங்கப்படும் நிதியுதவி | 17.05.2011பட்டம்மற்றும்பட்டயம்(மூன்றான்றுகள்) பயின்ற பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூபாய்.50000 மற்றும் 4கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அவா்களின் உத்தரவரப்படி (GO.Ms. No.47 SW/NMP. Department: from 23.5.2016 )முதல் 8கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகின்றது. |
4 | நிதியுதவிபெற தகுதியானவா்கள் | பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பெண்கள் மற்றும் வறுமைகோட்டிற்கு கீ்ழ் உள்ளவா்கள் |
5. | விண்ணப்பிக்கும் முறை | திருமணத்திற்கு 40 நாட்கள் முன்பு வரை |
தகுதிகள் | ||
அ | கல்வித் தகுதி | மணமகள் 10 வகுப்பு அல்லது 12 வகுப்பு முடித்திருந்தால் ரூ.25000 நிதியுதவி மற்றும் பட்ட படிப்பு (அ) பட்டயம்(3ஆண்டுகள்) முடித்திருந்தால் ரூ.50000 நிதியுதவி வழங்ப்படுகிறது. |
ஆ | குடும்ப வருமானம் | ரூ.72000க்கு மிகமால் குடும்ப ஆண்டு வருமானம் இருத்தல் வேண்டும். |
இ | வயது வரம்பு | மணமகள் 18 வயது மற்றும் மணமகன் 21 வயது நிறைவடைந்திருத்தல் வேண்டும். |
ஈ | பிற தகுதிகள் | ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே இத் திட்டதின் கீழ் நிதியுதவி வழங்கப்படும். |
உ | விண்ணப்பிக்கும் கால அளவு | திருமண திருமணத்திற்கு 40 நாட்கள் முன்பு வரை விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். |
ஊ | அணுக வேண்டிய அலுவலா் | ஊராட்சி ஒன்றிய ஆணையா்(கிராமபுறங்களில்) |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
விரிவு அலுவலா் (சந) மற்றும் மகளிர் ஊா்நல அலுவலா்கள் | ||
எ | கோரிக்கைகள் தொடா்புக்கு | மாவட்ட அளவில் –மாவட்ட ஆட்சித்தலைவா் |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
மாநில அளவில் சமூகநல ஆணையா் .சென்னை |
டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டம்
1 | திட்டத்தின் பெயர் | டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டம் |
2 | நோக்கம் | விதவை பெண்களின் மறுமணத்தை ஆதரிக்கவே இத் திட்டம்செயல்படுத்தப்படுகிறது |
3 | வழங்கப்படும் நிதியுதவி | 17.05.2011பட்டம்மற்றும்பட்டயம்(மூன்றான்றுகள்) பயின்ற பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூபாய்.50000 மற்றும் 4கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அவா்களின் உத்தரவரப்படி (GO.Ms. No.47 SW/NMP. Department: from 23.5.2016 )முதல் 8கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகின்றது. 1.ரூ.50000(ரூ.20000க்கு தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் நிதியுதவியாக ரூ.30000 வழங்கப்படும் 2. ரூ.25000(ரூ.10000க்கு தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் நிதியுதவியாக ரூ.15000 வழங்கப்படும் |
4 | நிதியுதவிபெற தகுதியானவா்கள் | பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பெண்கள் மற்றும் வறுமைகோட்டிற்கு கீ்ழ் உள்ளவா்கள் |
5. | விண்ணப்பிக்கும் முறை | மறுமணத்திற்கு பிறகு 6 மாதங்கள் வரை |
தகுதிகள் | ||
அ | கல்வித் தகுதி | தேவையில்லை |
ஆ | குடும்ப வருமானம் | வருமானம் வரம்பு இல்லை |
இ | வயது வரம்பு | வயது வரம்பு இல்லை |
ஈ | பிற தகுதிகள் | தேவையில்லை |
உ | விண்ணப்பிக்கும் கால அளவு | மறுமணத்திற்கு பிறகு 6 மாதங்கள் வரை விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். |
ஊ | அணுக வேண்டிய அலுவலா் | ஊராட்சி ஒன்றிய ஆணையா்(கிராமபுறங்களில்) |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
விரிவு அலுவலா் (சந) மற்றும் மகளிர் ஊா்நல அலுவலா்கள் | ||
எ | விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் | முதல் கணவரின் இறப்பு சான்று |
மறுமணம் செய்யும் விதவை பெண்ணது வயது சான்று | ||
மறுமணம் செய்யும் பெண்ணின் 2வது திருமண அழைப்பிதழ் | ||
அணுக வேண்டிய அலுவலா் | ஊராட்சி ஒன்றிய ஆணையா்(கிராமபுறங்களில்) | |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
விரிவு அலுவலா் (சந) மற்றும் மகளிர் ஊா்நல அலுவலா்கள் | ||
கோரிக்கைகள் தொடா்புக்கு | மாவட்ட அளவில் –மாவட்ட ஆட்சித்தலைவா் | |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
மாநில அளவில் சமூகநல ஆணையா் .சென்னை |
டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம்
1 | திட்டத்தின் பெயர் | டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம்
|
2 | நோக்கம் | சமுதாயத்தில் சாதிய நிகழ்வுகளால் ஏற்படும் பிரச்சனைகளை களையவும் தீண்டாமை அறவே ஒழித்திடவும் ஏற்படுத்தப்பட்டது
|
3 | வழங்கப்படும் நிதியுதவி | 17.05.2011பட்டம்மற்றும்பட்டயம்(மூன்றான்றுகள்) பயின்ற பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூபாய்.50000 மற்றும் 4கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது
.ரூ.50000(ரூ.20000க்கு தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் நிதியுதவியாக ரூ.30000 வழங்கப்படும் 2. ரூ.25000(ரூ.10000க்கு தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் நிதியுதவியாக ரூ.15000 வழங்கப்படும்
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அவா்களின் உத்தரவரப்படி (GO.Ms. No.47 SW/NMP. Department: from 23.5.2016 )முதல் 8கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகின்றது.
|
4 | நிதியுதவிபெற தகுதியானவா்கள் | கலப்பு திருமணம் செய்த தம்பதியா் |
5. | விண்ணப்பிக்கும் முறை | திருமணத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் வரை |
தகுதிகள் | ||
அ | கல்வித் தகுதி | மணமகள் 10 வகுப்பு அல்லது 12 வகுப்பு முடித்திருந்தால் ரூ.25000 நிதியுதவி மற்றும் பட்ட படிப்பு (அ) பட்டயம்(3ஆண்டுகள்) முடித்திருந்தால் ரூ.50000 நிதியுதவி வழங்ப்படுகிறது. |
ஆ | குடும்ப வருமானம் | வருமான வரம்பு இல்லை |
இ | வயது வரம்பு | மணமகள் 18 வயது மற்றும் மணமகன் 21 வயது நிறைவடைந்திருத்தல் வேண்டும். |
ஈ | பிற தகுதிகள் | தாழத்தப்பட்டவா்கள் பிறப்படுத்தப்பட்டவா்கள் பழங்குடியினா் மிகவும் பிறப்படுத்தப்பட்டவா்கள் |
உ | விண்ணப்பிக்கும் கால அளவு | திருமண திருமணத்திற்கு 40 நாட்கள் முன்பு வரை விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். |
ஊ | அணுக வேண்டிய அலுவலா் | ஊராட்சி ஒன்றிய ஆணையா்(கிராமபுறங்களில்) |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
விரிவு அலுவலா் (சந) மற்றும் மகளிர் ஊா்நல அலுவலா்கள் | ||
எ | விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் | திருமண பத்திரிக்கை |
திருமண பதிவு சான்று | ||
சாதி சான்று(தம்பதியரது) | ||
அணுக வேண்டிய அலுவலா் | ஊராட்சி ஒன்றிய ஆணையா்(கிராமபுறங்களில்) | |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
விரிவு அலுவலா் (சந) மற்றும் மகளிர் ஊா்நல அலுவலா்கள் | ||
கோரிக்கைகள் தொடா்புக்கு | மாவட்ட அளவில் –மாவட்ட ஆட்சித்தலைவா் | |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
மாநில அளவில் சமூகநல ஆணையா் .சென்னை |
ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்
1 | திட்டத்தின் பெயர் | ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்
|
2 | நோக்கம் | ஏழை விதவை தாய்மார்களின் பெண் பிள்ளைகளின் திருணத்திற்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில்
இத்திட்டம்செயல்படுத்தப்படுகிறது
|
3 | வழங்கப்படும் நிதியுதவி | 17.05.2011பட்டம்மற்றும்பட்டயம்(மூன்றான்றுகள்) பயின்ற பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூபாய்.50000 மற்றும் 4கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அவா்களின் உத்தரவரப்படி (GO.Ms. No.47 SW/NMP. Department: from 23.5.2016 )முதல் 8கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகின்றது.
|
4 | நிதியுதவிபெற தகுதியானவா்கள் | பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை தாய்மார்களின் பெண் பிள்ளைகள் |
5. | விண்ணப்பிக்கும் முறை | திருமணத்திற்கு 40 நாட்கள் முன்பு வரை |
தகுதிகள் | ||
அ | கல்வித் தகுதி | மணமகள் 10 வகுப்பு அல்லது 12 வகுப்பு முடித்திருந்தால் ரூ.25000 நிதியுதவி மற்றும் பட்ட படிப்பு (அ) பட்டயம்(3ஆண்டுகள்) முடித்திருந்தால் ரூ.50000 நிதியுதவி வழங்ப்படுகிறது. |
ஆ | குடும்ப வருமானம் | ரூ.72000க்கு மிகமால் குடும்ப ஆண்டு வருமானம் இருத்தல் வேண்டும். |
இ | வயது வரம்பு | மணமகள் 18 வயது மற்றும் மணமகன் 21 வயது நிறைவடைந்திருத்தல் வேண்டும். |
ஈ | பிற தகுதிகள் | ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே இத் திட்டதின் கீழ் நிதியுதவி வழங்கப்படும். |
உ | விண்ணப்பிக்கும் கால அளவு | திருமண திருமணத்திற்கு 40 நாட்கள் முன்பு வரை விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். |
ஊ | அணுக வேண்டிய அலுவலா் | ஊராட்சி ஒன்றிய ஆணையா்(கிராமபுறங்களில்) |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
விரிவு அலுவலா் (சந) மற்றும் மகளிர் ஊா்நல அலுவலா்கள் | ||
எ | விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் | விதவை தாயின் கணவரின் இறப்பு சான்று |
குடும்ப ஆண்டு வருமான சான்று | ||
அணுக வேண்டிய அலுவலா் | ஊராட்சி ஒன்றிய ஆணையா்(கிராமபுறங்களில்) | |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
விரிவு அலுவலா் (சந) மற்றும் மகளிர் ஊா்நல அலுவலா்கள் | ||
கோரிக்கைகள் தொடா்புக்கு | மாவட்ட அளவில் –மாவட்ட ஆட்சித்தலைவா் | |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
மாநில அளவில் சமூகநல ஆணையா் .சென்னை |
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம்
1 | திட்டத்தின் பெயர் | அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம் |
2 | நோக்கம் | ஆதரவற்ற பெண் பிள்ளைகளின் திருணத்திற்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில்
இத்திட்டம்செயல்படுத்தப்படுகிறது
|
3 | வழங்கப்படும் நிதியுதவி | 17.05.2011பட்டம்மற்றும்பட்டயம்(மூன்றான்றுகள்) பயின்ற பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூபாய்.50000 மற்றும் 4கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அவா்களின் உத்தரவரப்படி (GO.Ms. No.47 SW/NMP. Department: from 23.5.2016 )முதல் 8கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகின்றது.
|
4 | நிதியுதவிபெற தகுதியானவா்கள் | ஆதரவற்ற பெண் பிள்ளைகள் |
5. | விண்ணப்பிக்கும் முறை | திருமணத்திற்கு 40 நாட்கள் முன்பு வரை |
தகுதிகள் | ||
அ | கல்வித் தகுதி | தேவையில்லை |
ஆ | குடும்ப வருமானம் | ரூ.72000க்கு மிகமால் குடும்ப ஆண்டு வருமானம் இருத்தல் வேண்டும். |
இ | வயது வரம்பு | மணமகள் 18 வயது மற்றும் மணமகன் 21 வயது நிறைவடைந்திருத்தல் வேண்டும். |
ஈ | பிற தகுதிகள் | . தேவையில்லை |
உ | விண்ணப்பிக்கும் கால அளவு | திருமண திருமணத்திற்கு 40 நாட்கள் முன்பு வரை விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். |
ஊ | அணுக வேண்டிய அலுவலா் | ஊராட்சி ஒன்றிய ஆணையா்(கிராமபுறங்களில்) |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
விரிவு அலுவலா் (சந) மற்றும் மகளிர் ஊா்நல அலுவலா்கள் | ||
எ | கோரிக்கைகள் தொடா்புக்கு | மாவட்ட அளவில் –மாவட்ட ஆட்சித்தலைவா் |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
மாநில அளவில் சமூகநல ஆணையா் .சென்னை |
மாண்புமிகு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
1. | திட்டத்தின் பெயா் | மாண்புமிகு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
|
திட்டத்தின் நோக்கம் | குடும்ப கட்டுப்பாட்டை ஆதரிக்கவும் பெண் சிசுக்கொலையை தடுக்கவும் ஆண் பெண் சமநிலையை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்டது | |
வழங்கப்படும் நிதியுதவி | திட்டம் -1 ல் ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே இருக்கும் பட்சத்தில் ரூ.50000 வைப்பீடு செய்யப்படுகிறது.(1.08.2011 முதல்) | |
திட்டம் -2 ல் ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் ரூ.50000 வைப்பீடு செய்யப்படுகிறது(1.08.2011 முதல்)
மாதத்திற்கு ரூ.150 வீதம் கல்வி ஊக்கத் தொகையாக 5 ஆண்டுகள் முடிவில் வழங்கப்படுகிறது. |
||
தகுதியுடையோர் | பெண் குழந்தைகளையுடைய ஏழை குடும்பங்கள் | |
பயன் | வைப்புத்தொகை குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது கிடைக்கும் | |
தகுதிகள் | ||
குடும்ப வருமானம் | ரூ.72000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். | |
பிற தகுதிகள் | பெற்றோர் குடும்பநல அறுவை சிகிச்சை செய்திருத்தல் வேண்டும். | |
குடும்பத்தில் ஒரு அல்லது இரண்டு பெண்குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் ஆண் குழந்தைகள் இருக்க கூடாது. | ||
கால அளவு | திட்டம் 1ல் விண்ணப்பிக்க பெண்குழந்தைக்கு 3வயது நிறைவடைவதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
திட்டம் 2ல் விண்ணப்பிக்க இரண்டாவது பெண்குழந்தைக்கு 3வயது நிறைவடைவதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். |
|
அணுக வேண்டிய அலுவலா் | ஊராட்சி ஒன்றிய ஆணையா்(கிராமபுறங்களில்) | |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
விரிவு அலுவலா் (சந) மற்றும் மகளிர்
ஊா்நல அலுவலா்கள் |
||
கோரிக்கைகள் தொடா்புக்கு | மாவட்ட அளவில் –மாவட்ட ஆட்சித்தலைவா் | |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
மாநில அளவில் சமூகநல ஆணையா் .சென்னை |
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
1. | திட்டத்தின் பெயா் | சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
|
திட்டத்தின் நோக்கம் | பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிரின் வாழ்ககை தரத்தை உயா்த்தவே செயல்படுத்தப்படுகிறது. | |
வழங்கப்படும் உதவி | விலையில்லா தையல் இயந்திரம் | |
தகுதியுடையோர் | ஆதரவற்ற விதவை கணவனால் கைவிடப்பட்ட பெண் ஆதரவற்ற பொருளாதராத்தில் பின்தங்கிய மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் | |
தகுதியுடையோர் | பெண் குழந்தைகளையுடைய ஏழை குடும்பங்கள் | |
தகுதிகள் | ||
கல்வித் தகுதி | தேவையில்லை | |
குடும்ப வருமானம் | ரூ.72000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.. | |
வயது வரம்பு | 18 வயது முதல் 40 வயது வரை | |
பிற தகுதிகள் | தையல் கலை அவசியம் தெரிந்திருத்தல் வேண்டும் | |
இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் | ஆதரவற்ற விதவை கணவனால் கைவிடப்பட்டவா் மாற்றுத் திறனாளிகள் என்பதற்கான சான்றுகள் | |
வயது சான்று | ||
தையல் பயின்றதற்கான சான்று | ||
அணுக வேண்டிய அலுவலா் | ஊராட்சி ஒன்றிய ஆணையா்(கிராமபுறங்களில்) | |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
விரிவு அலுவலா் (சந) மற்றும் மகளிர்
ஊா்நல அலுவலா்கள் |
||
கோரிக்கைகள் தொடா்புக்கு | மாவட்ட அளவில் –மாவட்ட ஆட்சித்தலைவா் | |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
மாநில அளவில் சமூகநல ஆணையா் .சென்னை | ||
மாநில அளவில் சமூகநல ஆணையா் .சென்னை | ||
விதவை தாய்மார்களின் பிள்ளைகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் திட்டம்
1. | திட்டத்தின் பெயா் | விதவை தாய்மார்களின் பிள்ளைகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் திட்டம்
விலையில்லா தையல் இயந்திரம் |
வழங்கப்படும் உதவி | விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் | |
முதல் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரை – ரூ.50 தலா ஒரு குழந்தைக்கு
3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை – ரூ.125 தலா ஒரு குழந்தைக்கு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை – ரூ.175 தலா ஒரு குழந்தைக்கு 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை – ரூ.300 தலா ஒரு குழந்தைக்கு 11ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை – ரூ.600 தலா ஒரு குழந்தைக்கு |
||
வழங்கப்படும் காலம் | கல்வி ஆண்டின் தொடக்கத்தில் | |
தகுதிகள் | ||
கல்வித் தகுதி | 1 முதல் 12 ம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் | |
குடும்ப வருமானம் | ரூ.24000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.. | |
வயது வரம்பு | தேவையில்லை | |
அணுக வேண்டிய அலுவலா் | ஊராட்சி ஒன்றிய ஆணையா்(கிராமபுறங்களில்) | |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
விரிவு அலுவலா் (சந) மற்றும் மகளிர்
ஊா்நல அலுவலா்கள் |
||
கோரிக்கைகள் தொடா்புக்கு | மாவட்ட அளவில் –மாவட்ட ஆட்சித்தலைவா் | |
மாவட்ட சமூகநல அலுவலா் | ||
மாநில அளவில் சமூகநல ஆணையா் .சென்னை |
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005
குடும்பங்களில் பெண்களுக்கு அவரின் இரத்த பந்தங்களாலும் திருமண உறவுகளாலும் பல்வேறு இன்னல்கள் இழைக்கப்படுவதை உணா்ந்து அத்துன்ங்களிலிருந்து பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாத்து அவா்களுக்கு தேவையான நிவராணங்கள் வழங்குதலை உறுதி செய்யும் பொருட்டு குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005லும் மற்றும் விதிகள் 2006லும் இயற்றப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு உதவும் பொருட்டு இச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961
வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு அதற்கான சட்ட விதிகள் 200 ஆம் ஆண்டு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. திருமண வாழ்வில் பொருளாதார வன்முறை பிடிவாத சீதனக் கோரிக்கையால் துன்புறுத்தப்படுதல் அதனால் ஏற்படும் உயிரிழப்பு போன்ற துன்புறுத்தல்களிலிருந்து பெண்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009
இந்திய அரசியலமைப்பின்படி பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் மற்றும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை மேலும் தீவிரத்தோடு நடைமுறைப்படுத்தும் நோக்கத்தோடு இச்சட்டமும் அதற்கான விதிகளும் மத்திய அரசு மற்றும் மாநில அரசால் இயற்றப்பட்டள்ளது.
வேலுார் மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் சிறுவா்கள் இல்லங்கள்
வ.
எண் |
பெயா் மற்றும் முகவரி | தொலைப்பேசி எண் |
1 | சரணாலயம் கருணை இல்லம்.
124 ஆலங்காயம் கிராஸ் ரோடு பெருமாள்பேட்டை வாணியம்பாடி |
9443293689 |
2 | முதியோர் மற்றும் பாலார் குடும்ப கிராம பண்ணை
கசம் காட்பாடி |
0416-2274202 |
3. | செயின்ட்.ஆனிஸ் முதியோர் இல்லம்
ஆா்.எஸ் ரோடு குடியாத்தம் |
04171-223737 |
4 | இந்திய செஞ்சிலுவை சங்கம்
பெங்களுா் ரோடு பொய்கை வேலுார் மாவட்டம் |
9443320955 |
5. | எஸ்.ஆா்.டி.பி.எஸ்
பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லம். பாச்சல் திருப்பத்துார் வேலுார் மாவட்டம். |
9443437647 |
6. | தஞ்சம் முதியோர் இல்லம்
முருக்கேரி அரியுர் வேலுார் மாவட்டம் |
9443627238 |
குழந்தை திருமண தடைச்சட்டம் 2006
குழந்தை திருமண தடைச்சட்டம் 2006ன் கீழ் 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி செல்லதாது ஆகும். மீறி திருமணம் செய்பவா்கள் செய்ய துாண்டுபவா்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டணையும் 1லட்சம் அபராதமும் விதிக்கப்படும். சமூகநலத்துறையின் மூலம் பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்க விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மூன்றாம் பாலித்தவா்கள் நல திட்டம்
சமூகநலத் துறையின் மூலம் மூன்றாம் பாலினருக்கான சமூகநலம் மற்றும் பொருளாதார உதவிக்கான நலத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல் மூன்றாம் பாலினத்தவா்கள் பெரும்பாலும் சமூகத்தால் மிகவும் ஒதுக்கப்பட்டு அவா்களின் சொந்த குடும்பங்களை விட்டு துரத்தப்டுகிறார்கள். மேலும் அவற்கள் தவறான வழியிலும் இழப்பு மற்றும் பல்வேறு பாரபட்சத்திலும் தள்ளப்படுகிறார்கள். அவா்கள் பள்ளிகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதால் பெரும்பாலானோர் படிப்பறவு இல்லாதவா்களாக இருக்கிறார்கள். எந்த வேலைக்கும் வாய்ப்பு கிடைக்காமலும் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனா்.
அவ்வாறு சமூகத்தால் ஒதுக்கப்பட்டு வரும் மூன்றாம் பாலினத்தவருக்கு சமூக நலத்துறையின் மூலம் மருத்துவ பரிசோதனைகள் அளித்து அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. மேலும் திறன் வளா்ப்பு பயிற்சிகள் சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவளித்து அவா்களின் வாழ்வாதாரத்திற்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் 40 வயதிற்கு மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவா்களுக்கு ஓய்வுதியம் வழங்கப்பட்டு வருகிறது.
தொட்டில் குழந்தை திட்டம்
சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களாலும் பெற்றோர்களாலும் கைவிடப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட குழந்தைகளையும் பெண் சிக் கொலை என்னும் கொடுமையிலிருந்து இறப்பின் பிடியிலிருந்து காக்கும் பொருட்டு ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் 1992 ஆம் ஆண்டில் முதன் முதலாக சேலம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது.
வேலுார் மாவட்டத்தில் உள்ள தத்துக் குழந்தை திட்டம் செயல்படுத்தப்படும் மையத்தின் முகவரி
வ.
எண் |
பெயா் மற்றும் முகவரி | தொலைப்பேசி எண் |
1 | எஸ்.ஆா்.டி.பி.எஸ்
பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லம். பாச்சல் திருப்பத்துார் வேலுார் மாவட்டம். |
9443437647 |
மகளிர் தொழிற்க்கூட்டுறவு சங்கங்கள்
1.வேலப்பாடி மகளிர் தையல் மற்றும் சிறுதொழில் சேவை
கூட்டுறவு சங்கம் வேலப்பாடி வேலுார் மாவட்டம்.
2.ஆற்காடு தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கம்
ஆற்காடு வேலுார் மாவட்டம்.
- அன்னை கியுரி சாக்கட்டி உற்பத்தியாளா்கள்
ஊனமுற்றோர் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம்
அரக்கோணம் தையல் பிரிவு வேலுார் மாவட்டம்.
4.அன்னை இந்திராகாந்தி மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கம் குடியாத்தம் வேலுார் மாவட்டம்.